அட்டாளைச்சேனையில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரைப் பைகள் கொள்ளை
கடையை உடைத்து களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உரைப் பைகளை
கொள்ளையடித்த சம்பவம் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தின் பின்னணி

இந்த சம்பவம் நேற்று(31) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் அதன் முதலாளி நெல் அறுவடையின் வியாபாரத்துக்காக உரைப் பையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் களஞ்சியபடுத்திய கடைக்கு சென்ற போது கடை கதவின் பூட்டை இரும்பு வாளால் வெட்டி உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரைப் பைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணை

இது தொடர்பான மேவதிக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 34 நிமிடங்கள் முன்
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam