ரஞ்சன் ராமநாயக்கவிற்காக சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைத்தொலைப்பேசி புலனாய்வு பிரிவினரால் மீட்பு
சிறைப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைப்பேசி ஒன்றை அங்குனுகொலபெலஸ சிறைச்சாலை புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.
சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் சந்தன ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் படி, அதிகாரிகள் இன்று காலை சிறப்பு வை பிரிவையும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
சிறையின் வை பிரிவிலேயே ரஞ்சன் மற்றும் பல கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.தேடுதலின் போது வை பிரிவுக்கும், சுவருக்கும் இடையில் தரையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைத்தொலைபேசியை அதிகாரிகள் மீட்டனர்.
இந்தநிலையில், ராமநாயக்கவுக்கு வழங்குவதற்காக தொலைபேசி கொண்டு வரப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அங்குணகொலபெலெஸ சிறைச்சாலைக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவை எவரும் பார்வையிட இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.