விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தில் ஓரிருவர் உயிருடன் இருக்கலாம்: எம்.கே.சிவாஜிலிங்கம் தகவல்
உலகத் தமிழர் பேரவையினுடைய தலைவர் பழ நெடுமாறன், கவிஞர் காசியானந்தன் ஆகியோரை பழ நெடுமாறனின் அலுவலகத்தில் சந்தித்து இரண்டு மணித்தியாலங்கள் உரையாடியுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றையதினம் (20.02.2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
14ஆம் திகதி இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக பயணமாகி சென்றவேளை இந்திய தொலைக்காட்சி ஒன்றில் நான் ஒருமணிநேர விவாதத்தில் கலந்துகொண்டேன்.
குடும்பம் முடிந்து விடவில்லை
அதிலே தெரிவிக்கப்பட்ட முக்கிய கருத்துக்கள், தேசியத் தலைவர் பிரபாகரன் என காட்டப்பட்ட உடல் அவருடையது இல்லை என 2009 மே 20 இல் இருந்து நான் மறுத்து வருகிறேன்.
டி.என்.ஏ பரிசோதனையைச் செய்யுங்கள் என சவால் விட்டும் வருகிறேன். அத்துடன் இதுவரை மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லை.
மதிவதனியின் சகோதரி 10 வருடத்திற்கு முன்னர் அவரது தாயார் இறந்த பொழுது கூறிய செய்தி எல்லோரும் நினைப்பது போலே தமது குடும்பம் முழுக்க முடிந்து விடவில்லை. மீதி இருக்கிறது அண்ணை நேரில் சந்திக்கும் போது கூறுகிறேன் என்பதாகும்.
அதிலிருந்து அவர்களில் முழுப்பேரும் கொல்லப்படவில்லை. உயிருடன் ஒருவர், இருவர் அல்லது மூவர் மீதமாக உயிருடன் இருக்கலாம் என நான் தெரிந்துகொண்டேன்.
உலகத் தமிழர்களின் தலைவர்
அதற்கு மேலே பழ நெடுமாறனை உலகத் தமிழர்களின் தலைவராக நாங்கள் பரிபூரணமாக நம்புகின்றோம்.
இதிலே யார் யார் எதையாவது சொல்லட்டும். அவர் தமிழர் தேசிய முன்னணியின் தலைவராக இருக்கிறார். அது பதிவு செய்யப்பட்ட கட்சி, அத்துடன் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
விரிவான உலகத் தமிழர்களுடைய விடுதலையை நோக்கிய செயற்றிட்டங்களிலே தலைவர் பழ நெடுமாறன், கவிஞர் காசியானந்தன் செயற்படுவார்கள். அவர்களுடன் இணைந்து நாங்களும் செயற்படுவோம் என இதன் போது தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
