ராஜபக்சர்களின் ரகசியங்கள்! மித்தெனிய கொலை தொடர்பில் சபையில் எழுந்த கேள்வி
அருண விதானகமகே தொடர்பான விசாரணை நீடித்தால் ராஜபக்சர்களின் ரகசியங்கள் அம்பலமாகும் என்ற காரணத்தினாலும், இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பல கருத்துக்கள் எழுவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“தேசிய பாதுகாப்பு தொடர்பில் இங்கு கதைத்தாக வேண்டும்.
குறிப்பாக நீதிமன்றத்தில் அதுவும் நீதிபதிக்கு முன்னால் இடம்பெற்ற கொலை சம்பவம் மிகவும் பாரதூரமானது.
தேசிய பாதுகாப்பு
இதே நாளில்தான் "கஜ்ஜா" என்ற அருண விதானகமகே மித்தெனிய பகுதியில் இரண்டு சிறுவர்களோடு ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
மேலும் இதற்கு மறுநாள் உஸ்வட்டகெய்யாவ பகுதியில் கொலை செய்வதற்கான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதேபோல நேற்று கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நாடு முழுவதும் கொலைகள் இடம்பெறும்போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுகின்றது அல்லவா?
ஜனாதிபதியிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டின் தேசிய பாதுகாப்பு குறைவாக உள்ளது.
மித்தெனிய துப்பாக்கிச்சூடு
இவற்றை சீர்திருத்துவோம் என உறுதியளித்தீர்கள் அல்லவா?
இன்று மித்தெனியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியான இரு சிறுவர்களினதும் உடல் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.
அந்த இரு சிறுவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அருண விதானகமகே அரகலய ஆர்ப்பாட்டத்தில் இரு நபர்களை கொலை செய்தவர்.
ராஜபக்சர்களின் ரகசியங்கள்
அவரை முன்னதாக கைது செய்யாததன் காரணத்தின் காரணமாகவே இன்று இரு சிறுவர்களும் பலியாகியுள்ளனர்.
அருண விதானகமகே தொடர்பான விசாரணை நீடித்தால் ராஜபக்சர்களின் ரகசியங்கள் அம்பலமாகும் என சிலர் கூறுகின்றார்கள்.
இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு அநுர அரசிடம் நாம் வலியுறுத்துகின்றோம்.
மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.