முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன்

Sri Lanka Police Mullaitivu Northern Province of Sri Lanka
By Keethan Mar 02, 2024 04:27 PM GMT
Report

முல்லைத்தீவு திருட்டு வழக்கொன்றில் சாட்சியமாக நீதிமன்றில் ஆயராக இருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளததாக 

காணாமல் போன குறித்த இளைஞன் கடந்த வருடம் (23-01-2023) இடம்பெற்ற திருட்டு வழக்கொன்றின் முக்கிய சாட்சியமாக இருந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் (22-01-2023) நள்ளிரவு வீட்டின் உரிமையாளர் தாயாரின் வீட்டில் தங்கியிருந்த வேளை, வீட்டிற்குள் புகுந்த திருட்டு கும்பல் பொருட்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்திய - இலங்கை அரசாங்கங்களின் திட்டமிடலே சாந்தனின் இறுதிக்கிரியை இழுபறிக்கு காரணம்: போராளிகள் நலன்புரிச் சங்கம் குற்றச்சாட்டு

இந்திய - இலங்கை அரசாங்கங்களின் திட்டமிடலே சாந்தனின் இறுதிக்கிரியை இழுபறிக்கு காரணம்: போராளிகள் நலன்புரிச் சங்கம் குற்றச்சாட்டு

நீதிமன்ற பிடியாணை

வீட்டின் உரிமையாளரால் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடை பதிவு செய்து அது தொடர்பான வழக்கு  மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன் | Missing Witness Mullaitivu Theft Case Young Man

இந்நிலையில், பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலய உண்டியல்கள் மற்றும் மக்களின் கால்நடைகள் என்பன திருடப்பட்டு வந்திருந்தன.

இதற்கமைய சந்தேகத்தின் பேரில் காணாமல் போன குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , விசாரணைகளும் இடம்பெற்றிருந்த நிலையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

மேலும்,  குறித்த இளைஞனை சாட்சியமாக பதிவு செய்து வழக்கு தாக்கல் செய்த பொலிஸார் வழக்கு விசாரணைகள் ஓரிரு வாரங்களுக்குள் வரவிருந்த நிலையிலேயே குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதுடன் காணாமல் போன இளைஞனுக்கு நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தது.

குறித்த திருட்டு சம்பவத்தின் பின்னணியில் பலர் கைது செய்யப்படும் அபாயம் இருந்ததாலேயே குறித்த இளைஞன் காணாமல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.   

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் ஜனாதிபதி செயற்படுகிறார்: மனுஷ பெருமிதம்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் ஜனாதிபதி செயற்படுகிறார்: மனுஷ பெருமிதம்

சட்டவிரோத செயற்பாடு

இதேவேளை ரவிச்சந்திரன் கேமாரஞ்சன் (24) எனும் தனது மகனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என தந்தையால் (05.11.2023) நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் மற்றும் உறவினர்கள் மாந்தை கிழக்கு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள முக்கிய வழக்கின் சாட்சிய இளைஞன் | Missing Witness Mullaitivu Theft Case Young Man

இதன்படி தேடுதல் நடவடிக்கையில் இளைஞர் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்பட்ட, பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த நாட்டு துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஓரிரு நாட்களின் பின்னர் காணாமல் போன இளைஞன் பாவித்ததாக நம்பப்படும் துவிச்சக்கர வண்டி ஒதுக்குப்புறமாக உள்ள ஆற்றங்கரை அண்டிய காட்டு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று காணாமல் போன இளைஞனின் தொலைபேசியை வைத்திருந்த இளைஞரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை குறித்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட தொலைபேசியை பொலிஸார் சான்று பொருளாக எடுத்து கொண்டனர்.

மேலும், மாந்தை கிழக்கு பகுதியில் மர்மமான முறையில் 2 பேர் இறந்துள்ளதுடன், அவர்களும் நீதிமன்ற வழக்குகளில் சட்டவிரோத செயற்பாடுகளில் மிக முக்கிய சாட்சியமாக இருந்தனர் என்பதுடன் குறித்த இளைஞரும் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சத்தில் தாம் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

வெடுக்குநாறி பூஜைக்கு எதிராக கிளம்பியுள்ள பௌத்த தேரர்கள்: நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

வெடுக்குநாறி பூஜைக்கு எதிராக கிளம்பியுள்ள பௌத்த தேரர்கள்: நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

 

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US