இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்:பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
பல வருடங்களாக காணாமல் போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய அதபத்து முதியன்சேலாகே சுமேத புத்ததாச என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில், காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் மனைவி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்
இதனையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தநிலையில், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் காணாமல்போயுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 071 - 8594912 அல்லது 011 – 2392900 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri