காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் நேற்று(20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை தெரிவு செய்தனர்.
நிர்வாகத் தெரிவு
இதன் போது வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவராக திருமதி.யோகராசா கனகரஞ்சினியும்,செயலாளராக திருமதி.சிவானந்தன் ஜெனித்தா , உப தலைவராக திருமதி.வல்லிபுரம் அமலநாயகியும் ,உப செயலாளராக செபஸ்தியான் தேவியும் ,பொருளாளராக கதிர்காமத்தம்பி கோகிலவாணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதே போன்று புதிய நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் , வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திற்குமான,மாவட்ட தலைவர்களின் தெரிவு உறுதிப்படுத்தப்பட்டது 1)திருகோணமலை-செபஸ்தியான் தேவி 2)அம்பாறை-திருமதி.தம்பிராசா செல்வராணி 3)மட்டக்களப்பு-திருமதி.அமலராஜ் அமலநாயகி 4) மன்னார்-திருமதி.இமானுவேல் உதயச்சந்திரா 5)வவுனியா-திருமதி.சிவானந்தன் ஜெனித்தா 6) முல்லைத்தீவு-திரு.சுப்பிரமணியம் பரமானந்தம். 7) கிளிநொச்சி-திருமதி.கதிர்காமத்தம்பி கோகிலவாணி. 8) யாழ்ப்பாணம்- திருமதி.சிவபாதம் இளங்கோதை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
புதிய நிர்வாக தெரிவுக்கு பின்னர் ஊடக சந்திப்பு இடம்பெற்றது-ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,
எமது சங்கம் 2017ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை நேர்த்தியாக வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இயங்கி வருகிறது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் என்பது உறவுகளைத் தேடுகின்ற சர்வதேச நீதி கோருகின்ற ஒரு அமைப்பாகவே எப்போதும் பயணிக்கும்.
இதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம். ஆனாலும் இந்த அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் எவரும் உரிமை கோர முடியாது.
ஆகையினால் ஒரு கட்டமைப்பாக சிறந்த முறையில் செயற்பட்டு வருகிற இந்த அமைப்பானது எமது உறவுகளைத் தேடுகின்ற சர்வதேச நீதியை கோருகின்ற இனத்திற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முழு வீச்சோடு அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னெடுத்துச் செல்லும் என்றனர்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



