மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு - கிழக்கு மக்களுக்கு அழைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள போராட்டத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் கிட்டு பூங்கா முன்பாக இடம்பெறவுள்ளது.
மக்களுக்கு அழைப்பு
“சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்ப்போம் வாரீர் ” என்ற தொனியில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழர்களுக்கு எந்த வித நீதியும் உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள் நிகழாமையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர்களாக ஒருமித்து குரல்கொடுக்க அனைவரம் ஒத்துழைக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
