அரசின் காணாமல்போனோர் அலுவலகம் ஓர் இன வெறி அமைப்பு என்று கண்டனம்

Missing Persons Sri Lanka
By Rakesh Oct 29, 2022 06:54 AM GMT
Report

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது ஓர் இனவெறி அமைப்பு என்று காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமாரால்  வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது .

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, வவுனியாவில் 2075 நாட்களை கடந்தும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தினரால், அரசின் காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் அதன் பொறிமுறையைக் எதிர்த்து - கண்டனம் தெரிவித்து காணாமல்போனோர் அலுவலகத்தால் தாய்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதங்களும் போராட்டப் பந்தலில்  தீ வைத்து எரிக்கப்பட்டன.

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது ஓர் இனவெறி அமைப்பு. காணாமல்போனோர் அலுவலகம், தொல்பொருள், வனவள திணைக்களம் அனைத்தும் ஒன்றுதான்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2078ஆவது நாள்.

இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை என்றும், சரணடைந்த தமிழர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்றும் அரசின் காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முதலில் மன்னாரில் அரசின் காணாமல்போனோர் அலுவலகம் உருவானபோது நாங்கள் நிராகரித்து ஆர்ப்பாடட்டம் செய்தோம்.

நிமல்கா பெர்னாண்டோ இதனை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கினார். சிங்கள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காகவே காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.

சுமந்திரன் அரசின் காணாமல்போனோர் அலுவலகத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அரசின் காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்குவதற்காக ஜெனிவாவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை அவர் கைவிட்டார் என்பதை நாம் தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்தச் சுமந்திரனைத் தமிழ் அரசியலில் இருந்து தூக்கி வீச வேண்டும். அவரை மீண்டும் கொழும்புக்கு அனுப்ப வேண்டும். பல தமிழர்களைக் கடத்திச் சென்றும், குண்டுகள் போட்டும், தமிழரைக் கொன்றதும் இலங்கை இராணுவம்தான் என்று 2011 ஐநா குழு அறிக்கை கூறுகின்றது.

2011இல், ஐ.நா. குழு நம்பகமான குற்றச்சாட்டுகளைக் கண்டறிந்தது, அது நிரூபிக்கப்பட்டால், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் ஓர் இன வெறி அமைப்பு என்று கண்டனம் | Missing Person S Office Is Condemned

அரசின் காணாமல்போனோர் அலுவலகம் என்பது தொல்பொருள், வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற பிற அரசுத் துறைகளுடன் இணைந்து தமிழர்களை ஒடுக்குவதற்கான மற்றொரு சிங்கள ஸ்ரீலங்காவின் கருவியாகும்.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் கீழ், ஸ்ரீலங்கா இன்னும் அதன் அடக்குமுறையைத் தொடர்கின்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற பணக்கார நாடுகள் ஸ்ரீலங்காவுக்குப் பணம் கொடுத்து அவர்களின் கஷ்டத்தைத் தீர்த்தால் அது அவர்களின் இன அழிப்புக்கு ஒட்சிசன் கொடுப்பதாககும். அரசின் காணாமல்போனோர் அலுவலகத்தின் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்.

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றி பேசுவது பயனற்றது மற்றும் நேரத்தை வீணடிப்பது என்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் தெரிவிக்க விரும்புகின்றோம். தமிழர்களுக்கு உதவக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா என்று நாங்கள் இன்னும் உறுதியாக நம்புகின்றோம்" - என்றுள்ளது. 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US