மஸ்கெலியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது நேற்றிரவு (26.02.2024) மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 40 வயது மதிக்கத்தக்க இரு பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் காணாமல்போயுள்ளார் என அவரின் மனைவியால் ஐந்து நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
