வாழைச்சேனையில் காணாமல் போன படகு : உரிமையாளரின் வேண்டுகோள் (VIDEO)
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்கு சென்ற மீன்பிடி இயந்திர படகு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், சென்றவர்கள் மூவர் மாத்திரம் திரும்பியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பருக்கு சொந்தமான IMULA 0039MTR எனும் இலக்கமுடைய மஞ்சள் நிற அலீயா என பெயர் இடப்பட்ட மீன்பிடி இயந்திர படகுடன், வாழைச்சேனை மற்றும் பிறைந்துறையைச் சேர்ந்த மூன்று மீனவ தொழிலாளர்கள் மீன் பிடிக்க கடந்த 02ம் திகதி ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர்.
ஆனால் கடந்த 09ம் திகதி அதிகாலையில் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவும், அவ்வேளை நிலவிய கடல் கொந்தளிப்பினாலும், ஊர் செல்வதற்கு வருகை தந்த மற்றொரு ஒரு படகின் உதவியுடன் படகினை எடுத்து வர முயற்சித்தும் பயனளிக்காமையினால் மீன்பிடி இயந்திர படகும், அதன் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களும் கடல் நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் படகு உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்டும் இன்னும் படகு கிடைக்கவில்லை என்றும், வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த படகினை யாரும் மீனவர்கள் கண்டு கொண்டால் உடனடியாக படகின் உரிமையாளராக வாழைச்சேனையைச் சேர்ந்த அஜ்வத் முகம்மது சபா என்பவரின் 0770556385 தொலைபேசி இலக்கம் அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 0652257709 என்ற இலக்கத்துக்கு அறியத் தருமாறு வாழைச்சேனை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
