பதுளை - லுனுகல பகுதியில் பதிவாகியுள்ள அதிர்வு
பதுளை- பசறை, லுனுகல பகுதியில் இன்று மாலை சிறியளவிலான அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இதனை நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிக்டர் அளவில் 1.8 முதல் 2.0 வரை நிலநடுக்கம் இன்று மாலை 4.39 மணியளவில் பதிவாகியுள்ளது என்று ம்அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,கண்டியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் இன்று மாலை 4.39 இற்கும் சிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.