புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு!
நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக "பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த நிலை தற்போதுள்ள நீதிமன்ற பதிவாளர் பதவிக்கு உயர்ந்ததாக இருக்கும், அத்துடன் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.
“பதிவு நீதிபதி” என்ற நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும்.
இந்தநிலையில் இந்த பதவிக்கு அதிகாரங்களை வழங்குவதற்காக நீதித்துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நீதியமைச்சின் செயலாளர் பியுமந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வழக்குகளை விசாரிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பொறுப்பான இந்த பதவிக்காக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த அதிகாரி ஆவணங்கள் ஊடாக சென்று வழக்குகளை விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்.
வழக்குகளின் விசாரணையின் தாமதத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam