வீரர் தொடர்பில் எழுந்த சர்ச்சை - திடீரென ஒத்திவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா
பொரலஸ்கமுவவில் இன்று ( 16) நடைபெறவிருந்த SLADA மோட்டார் விளையாட்டு சாம்பியன்ஷிப் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்க விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மோட்டார் ஸ்போர்ட் பந்தயத்தில் சட்டவிரோதமாக போட்டியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வீரரின் எதிர்ப்பையடுத்து இன்று (16.01.2026) நடைபெறவிருந் விருது வழங்கும் விழாவை ஒத்திவைக்க விளையாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கார் குறித்து சந்தேகம்
விளையாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர், விருது வழங்கும் விழாவை எந்தவொரு அறிவிப்புமின்றி உடனடியாகுமாறு ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(SLADA) Sri Lanka Autosports Drivers Association (SLADA) மோட்டார் ஸ்போர்ட் சாம்பியன்ஷிப் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்த முடிவு இலங்கையில் மோட்டார் விளையாட்டு துறைக்கு பெரும் இழப்பு என்று வீரர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் விருது வழங்கும் விழாவிற்கு செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்,
இறுதிப்பந்தயத்தில் நீக்கப்பட்ட புள்ளிகள்
நவம்பர் 23 ஆம் திகதி நடைபெற்ற SLADA ரேசிங் போட்டியின் போது வீரர் ஒருவரின் கார் குறித்து சந்தேகம் இருப்பதாக மற்றொரு வீரர் அளித்த முறைப்பாட்டிற்கமைய போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏற்பாட்டாளர்களின் விசாரணைக்குப் பிறகு, போட்டி விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணான காரின் கூடுதல் பகுதி அடையாளம் காணப்பட்டு அவரது புள்ளிகள் இறுதிப் பந்தயத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் வீரர்கள் கூறுகின்றனர்.
இறுதிப் பந்தயத்தில் குறித்த வீரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் குற்றத்திற்காக குறைக்கப்பட்ட புள்ளிகளால் வீரர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதனால்தான் அவர் இந்த எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் வீரர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அதிகாரிகள் முறைப்பாட்டாளரின் உண்மைத்தன்மையை விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri