ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார்.
இதன்படி தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை நிரப்பப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 8000 எனவும், மாகாண மட்டத்தில் 6000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |