அமைச்சுப் பதவிகளை ஏற்பது கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் செயல்! மைத்திரி தகவல்
சுதந்திரக் கட்சி வெளியிலிருந்தே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் என்று அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கட்சியின் கடிதத் தலைப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன,
''இந்த அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதே கட்சியின் தீர்மானமாகும். அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதில்லை என்பது நாம் கூட்டாக எடுத்துள்ள முடிவாகும்.
எனவே அதனை மீறி யாரேனும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றால் அது கட்சியின்
கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்'' என்று தெரிவித்துள்ளார்.