செல்வந்தர்களிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி விடுத்துள்ள கோரிக்கை
கோவிட் தடுப்பு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே செல்வந்தர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
கோவிட் நோயாளிகளுக்கான வைத்தியசாலைகளில் தேவையான வசதிகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் ஒட்சிசனுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அதற்கான உபகரணங்கள் அதிகளவில் தேவைப்படுவாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைகளுடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்குமாறு செல்வந்தர்களிடம் அமைச்சர் கோரியுள்ளார்.