முன்னாள் அமைச்சரை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 6 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவு
அரசாங்கத்தின் முக்கிய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 6 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தனது வீடு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென வழங்கப்பட்ட இந்த உத்தரவு காரணமாக அந்த சிரேஷ்ட அமைச்சர் கடும் அதிர்ச்சிக்கும், வெறுப்புக்கும் உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் உத்தரவுக்கு அமைய சிரேஷ்ட முன்னாள் அமைச்சர் 6 மணி நேரத்திற்குள் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மற்றுமொரு முக்கிய பிரமுகர் அந்த இல்லத்தை கைப்பற்றியுள்ளதுடன் அங்கு குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.