சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
சட்டமா அதிபரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு எதிராக நேற்றுமுன்தினம் போராட்டம் இடம்பெற்ற நிலையில், அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் சிலர் களமிறங்கி இருந்தனர்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் நேற்று(22.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் பிரேரணை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபரைப் பாதுகாக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சட்டமா அதிபரைப் பாதுகாக்கும் நீதி அமைச்சரும் வீடு செல்ல வேண்டும் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் உரிய இடங்களில் அவற்றைத் தாக்கல் செய்யலாம். ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். சட்டமா அதிபரை நீக்குவது பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட வில்லை.
குற்றப் பிரேரணை கொண்டு வருவது பற்றியும் கலந்துரையாடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan