நுவரெலியாவில் நிகழ்ந்துள்ள அதிசயிக்கத்தக்க மாற்றம்! குவியும் வெளிநாட்டவர்கள்
நுவரெலியாவில் வழக்கத்திற்கு மாறாக பொழியும் துகள் உறைபனி காரணமாக அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் துகள் உறைபனி பொழிந்து வருகின்றது.
இன்றும்(23) மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையாக துகள் பனிப்பொழிந்துள்ளதுடன், அதிகாலை வேலைகளில் மாவட்டமும் முழுதும் பனியால் சூழப்பட்டு காணப்படுகின்றது.
மாறுபட்ட காலநிலை..
இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த துகள் பனிப்பொழிவு காரணமாக மலையகத்தில் மரக்கறிச் செய்கை, மலர் உற்பத்தி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் சடுதியான அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக நுவரெலியா குதிரைப் பந்தய திடல், கிரகரி வாவிக் கரையோரம் ஆகிய இடங்களில் அதிக துகள் பனிப்பொழிவு காணப்படுகின்றது.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் புகைப்படம் எடுத்தும் ரசித்தும் ஆச்சரியமாக பார்வையிட்டும் வருகின்றனர்.
இதேவேளை இந்த நாட்களில் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்து.
குறிப்பாக மாலை 5 மணிக்கு மேல் தொடங்கும் குளிர் காலை 9 மணி வரை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam