தென்கொரிய பிரதி சுற்றாடல் அமைச்சரை சந்தித்த இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்
தென்கொரியாவில் நடைபெற்ற பசுமைக் காலநிலை மாநாட்டில் பங்கேற்ற சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட், தென்கொரிய பிரதி சுற்றாடல் அமைச்சர் யோ ஜேசுலை சந்தித்துள்ளார்.
தென்கொரியாவின் பரடைஸ் ஹோட்டலில் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற இம்மாநாட்டில் ஆசிய, பசுபிக் சமுத்திர நாடுகளின் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் பற்றி அமைச்சர் நஸீர் அஹமட், பசுமைக் காலநிலை மாநாட்டில் கலந்துரையாடியுள்ளார்.

நிதியுதவி வழங்க இணக்கம்
இலங்கையில் சுற்றாடல் துறையுடன் சம்பந்தப்பட்ட சுற்றாடல் கனிய மணல் அகழ்வு தொடர்பிலும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கள்
இலங்கை, தென்கொரியா விவசாயிகளின் பரஸ்பர தொழிநுட்ப மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதோடு சுற்றாடல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பிலும் ஆர்வம் காட்டப்பட்டடுள்ளது.
மேலும் நிதியுதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், முகவர் நிறுவனங்களுடன் அமைச்சர் ஹாபிஸ் நசீர், அங்கு நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக சுற்றாடலுடன் தொடர்புடைய திட்டங்களை நிறைவேற்ற பெருமளவான நிதியுதவிகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam