கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குமார ஜெயக்கொடி
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மாவட்டத்தின் பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பாக கள விஜயம் மேற்கொண்டார்.
குறித்த விஜயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கடல் தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடககளுக்கு கருத்து தெரிவித்தார்.