மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும் - எவ்வித சிக்கலும் இல்லை என்கின்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன
வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மனிதப் புதைகுழிக்கான நிதி
அதன்படி, மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.
அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சு நடவடிக்கை
உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



