முகக் கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய தென்னிலங்கை அமைச்சர்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசம் அணியாமல் பொது நிகழ்வில் கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு விசேட பிரிவு ஒன்றை அமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளளது.
இது தொடர்பில் மக்கள் விமர்சித்த நிலையில் அமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதில் அரச நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்ககும் நிலையில் குறித்த நிகழ்வு எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது?
முகக் கவசம் அணியாத மக்களை பொலிஸார் தூக்கி சென்று வழக்கு தாக்கல் செய்யும் போது அமைச்சர் இவ்வாறு சட்டத்தை மீறி செயற்படுவது எவ்வாறு? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
