பிரித்தானியாவில் தமிழ் குடும்பத்தின் வீட்டில் சிங்கள அமைச்சரின் மகள் -அம்பலப்படுத்தும் சிங்கள அரசியல்வாதி
சமகால அரசாங்கத்தின் அமைச்சரின் மகள் ஒருவர் பிரித்தானியாவில் உயர் கல்வி கற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தமிழ் புலம்பெயர் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வீட்டில், குறித்த மாணவி தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் வெற்றி நிகழ்வு
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் அமைப்பினருடன் அமைச்சர்கள் பழகுவதை நாங்கள் தவறு என்று கூறவில்லை.
ஆனால், அரசாங்கத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் பழகும்போது, தாங்கள் இவர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தகவல் மூலமாக போர் வெற்றி நிகழ்வுகளுக்கு எந்த இடையூறும் விளைவிக்க விரும்பவில்லை. எனினும் இதனை வெளிப்படுத்த வேண்டியது என சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam