சுசிலின் பதவி நீக்கம் தொடர்பில் வருத்தப்படும் அமைச்சர் டளஸ்
சுசில் பிரேமஜயந்தவை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை குறித்து வருத்தப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இது அமைச்சரவையின் முடிவுக்கு அமைய எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல எனவும் ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்த முடிவு எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றதுடன் அதன் போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டளஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு வரும் வழியிலேயே நானும் இதனை கேள்விப்பட்டேன். இது நேற்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அவர் எடுத்த தீர்மானம்.
எங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் என்ற முறையில் எமக்கும் இந்த விடயம் தொடர்பில் வருத்தம் இருக்கின்றது. ஜனாதிபதி என்னை பதவி நீக்க வேண்டும் என்றாலும் பதவியில் இருந்து நீக்க முடியும்.
எனினும் பதவி நீக்கப்படுவதற்கான உரிய காரணம் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கத்தை விமர்சித்தமை காரணமாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
வீரவங்ச, கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அமைச்சரவையில் நடந்த பேச்சு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
நான் பல அமைச்சரவைகளில் அங்கம் வகித்து இருக்கின்றேன். இது போன்ற விமர்சனங்களை முன்வைக்கக் கூடிய சந்தர்ப்பமுள்ள அமைச்சரவைகள் இருந்ததில்லை.
எனினும் பதவி நீக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்பதை நாம் நாளைய தினம் பார்க்க முடியும் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri