வட்டுவாகல் பாலத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல்
நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கள விஜயம் இன்றையதினம்(22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கள விஜயம்
இதன் ஆரம்ப வேலைகள் வருகின்ற ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அமைச்சர் அங்கு கள விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் யொய்ஸ் குறுஸ் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் முதலானோர் என பலரும் கலந்துகொண்டனர்.
வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் பாலம் புனரமைப்பிற்கான ஒப்பந்தந்த தாரர்களுக்கான கோரல் விடுக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் அளவில் கட்டுமானப்பணிகள் தொடங்கி 2026 ஆம் ஆண்டு இறுதி பகுதிக்குள் இந்த வேலைத்திட்டத்தினை முடித்தவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற றுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கீதன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




