தினமும் அகற்றப்படும் மில்லியன் கணக்கான முகக்கவசங்கள்
நாட்டில் கோவிட் தொற்றுநோய் பரவியுள்ள நிலையில் தினமும் கிட்டத்தட்ட 15 மில்லியன் முகக்கவசங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இவை பறவைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக அமைந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் முதல் பாதியில் (2020) கிட்டத்தட்ட 800 தொன் முகக்கவசங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
முகக்கவசச் சுழல்கள் கழுத்தில் சுற்றுவதால் பறவைகள் இறக்கின்றன. எனவே, முக்கவங்களை அப்புறப்படுத்தற்கு முன்னர் முகக்கவசங்களின் இருபுறமும் உள்ள காதுப்பிடிப்புக்களை வெட்ட விடுமாறு அவர் கோரியுள்ளார்.
இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என்று அமைச்சர்
தெரிவித்துள்ளார்.