வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு கோடிக்கணக்கில் கிடைத்த அதிர்ஷ்டம்
துபாயில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் இலங்கை தமிழர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
துபாயில் பணிபுரியும் தமிழரான துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கே "Abu Dhabi Big Ticket" என்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் இந்த பணத்தொகை கிடைத்துள்ளது.
குறித்த நபருக்கு இலங்கை ரூபாய் பெறுமதியில் 175.75 கோடி அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் பணிக்காக துபாய் சென்ற இவர் நண்பர்களுடன் இணைந்து அதிர்ஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக இந்த பணத்தொகை கிடைத்துள்ளது.