பால் மாவின் விலைகளை அதிகரிக்க நேரிடும்
பெறுமதி கூட்டல் வரி உட்பட சில வரிகள் கடந்த 31 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட்டாயம் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய மற்றும் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரி அதிகரிப்பு

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கு பெறுமதி கூட்டல் வரி அறவிடப்படுவதில்லை. எனினும் பால் மாவுக்கு இந்த வரி அறவிடப்படுமா அல்லது இல்லையா என்பதை அரசாங்கம் உறுதியாக தெரிவிக்கவில்லை.
பால் மாவுக்கு பெறுமதி கூட்டல் அறவிடப்படா விட்டாலும் விசேட சந்தை பொருள் வரி உட்பட சில வரிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு முறை பால் மாவின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.
ரூபாய் மதிப்பிழப்பு

மேலும் அமெரிக்க டொலருக்கு ஈடாக ரூபாய் மதிப்பிழந்துள்ளமையும் விலைகள் தொடர்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ரூபாவின் பெறுமதி 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், பால் மாவின் புதிய விலைகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் எனினும் எதிர்வரும் காலத்தில் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனவும் அது 50 வீத விலை அதிகரிப்பாக இருக்கும் எனவும் பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam