அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது: பாதுகாப்பு அமைச்சு
அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை இலக்கு வைத்து எந்தவிதமான இராணுவ அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்கும் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
குற்றச்சாட்டை நிராகரிக்கும் இராணுவம்