குற்றச்சாட்டை நிராகரிக்கும் இராணுவம்
இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போராட்டகாரர்களுக்கு எதிராக வன்முறையை துண்டி விட இராணுவம் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ நேற்று தெரிவித்திருந்தார்.
கடவத்தையில் உள்ள இராணுவ கமாண்டோ படைப் பிரிவின் முகாமில் சேவையாற்றும் படையினருக்கு போராட்டகாரர்களை அடக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் போராட்டகார்கள் எழுப்பும் கோஷங்களை எழுப்பியவாறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை போராட்டகாரர்களை அடக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகா, இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
