அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணிக்கு மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருது
அவுஸ்திரேலிய தமிழ் சட்டத்தரணியான சங்கரி சந்திரன் தனது 'சாய் டைம் அட் சினமன் கார்டன்ஸ் (Chai Time at Cinnamon Gardens ) நாவலுக்காக 60,000 டொலர் மதிப்புள்ள மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றுள்ளார்.
சிட்னியில் உள்ள தி ஓவோலோ விருந்தகத்தில் நேற்று (25.07.2023) இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய எழுத்தாளர்களிடையே அங்கீகாரம் பெறுவது அசாதாரணமானது. இந்தநிலையில் 'மைல்ஸ் ஃபிராங்க்ளின் இலக்கிய விருதை வென்றது மிகவும் பெருமையாக இருக்கிறது, எனவே இன்னும் தாம் அதிர்ச்சியில் இருப்பதாக தமிழ் சட்டத்தரணி சங்கரி சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுக் கூற்றுகளை கவனமாகப் பின்பற்றுகிறது
உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிப்பதற்காக எண்பதுகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படும் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வசிப்பவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் எடுத்துக்காட்டுகிறது.
அத்துடன் இது போர், இனப்படுகொலை, இனவெறி, குடும்பம், காதல் மற்றும் நட்பு போன்ற கருப்பொருள்களை இந்த நாவல் ஆராய்கிறது. நிகழ்வின்போது சந்திரனின் நாவலைப் பாராட்டிய நடுவர்கள், இந்த நாவல் சர்ச்சைக்குரிய வரலாற்றுக் கூற்றுகளை கவனமாகப் பின்பற்றுகிறது, மறக்கப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் கொடூரங்கள் என்பதை நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சந்திரனின் பெற்றோர், இருவரும் மருத்துவர்களாக பணிபுரிந்தனர். நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருந்தமையால், இலங்கையை விட்டு வெளியேறினர். இந்தநிலையில் இங்கிலாந்துக்கு சென்று பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
