மத்திய கிழக்கு போர்: போக்குவரத்து பாதிப்பால் மருந்து விலை உயரும் அபாயம்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், சர்வதேச மருந்து விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் காரணமாக வான்வழிப் பாதைகள் மூடப்படுவதும், விமானங்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுவதும் மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்வதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, மிகக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டிய மற்றும் குளிரூட்டப்பட்ட நிலையில் (Cold Chain) கொண்டு செல்லப்பட வேண்டிய புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் உயிரியல் மருந்துகள் (Biologics) விநியோகிக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சை
போர் மண்டலத்தைத் தவிர்க்க விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்வதால், விமான எரிபொருள் செலவு அதிகரித்து, மருந்துகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டுபாய் மற்றும் டோஹா போன்ற உலகின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்கள் (Aviation Hubs) போரினால் பாதிக்கப்பட்டுள்ளதால், தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் மருந்துப் பொதிகள் தேக்கமடைந்துள்ளன.
குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மலிவு விலை பொதுவான மருந்துகள் (Generic Medicines) கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட முடியாமல், தற்போது அதிக செலவு பிடிக்கும் வான்வழிப் போக்குவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்தத் தடங்கல்கள் தொடர்ந்தால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சையைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை News Lankasri
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan