பதற்றநிலை காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் - காத்திருக்கு ஆபத்து
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் பதற்றநிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இலங்கை பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் எரிபொருள் மற்றும் கப்பல் கட்டணங்களின் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணவீக்கம் நாட்டில் உருவாக்கப்படலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை ரூபாயின் மதிப்பு
மேலும், ஈரான் மோதலுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 5 சதவீதம் குறையக்கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிகரித்து வரும் வெளிப்புற அழுத்தங்கள் மற்றும் நடப்புக் கணக்கில் ஏற்படும் தாக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு அதன் ஆரம்ப கணிப்பை விடக் குறையக்கூடும் என்ற தெளிவான ஆபத்து இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றது.
மத்திய கிழக்கில் நடந்து வரும் பதட்டங்கள் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்துக்களை நாடியதால் அமெரிக்க டொலர் வலுப்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, இலங்கை பல வழிகளில் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள், கப்பல் செலவுகள் மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை உணவு, போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகளில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு கடுமையான ஆபத்தாக காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 10 மணி நேரம் முன்
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam