இன்றும் கனமழை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 10 கி.மீ தொடர்க்கம் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில், அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என திணைக்களம் கோரியுள்ளது.
நுவரெலியா
இந்நிலையில், நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் உள்ள தோட்ட குடியிருப்பின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் 04 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) மதியம் திடீரென காற்று வீசியதாகவும், அதே நேரத்தில் கூரையுடன் இணைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் கழன்று விழுந்ததாகவும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி - திருமாள்
மினி சூறாவெளியால் நேற்று (30)காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுர த்தில் உள்ள வீடொன்றில் வீட்டு கூரை உள்ளிட்ட தகர சீட் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய கால நிலையால் குறித்த வீட்டின் மீது மேல் பொருத்தப்பட்ட தகரங்கள் இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விடயங்களை உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
செய்தி - ரொஷான்
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri