இலங்கையின் வாக்காளர்களுக்காக கத்தோலிக்க பேரவையின் செய்தி
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்காக கத்தோலிக்கப் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
இதன்படி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முறைமை மாற்றத்தைக் கொண்டுவந்து ஊழலை ஒழிக்கக்கூடிய மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வாக்காளர்களை கேட்டுள்ளது.
மக்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் தங்கள் சுயநலம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக அதிகாரப் பதவிகளுக்காக மக்களைத் தூண்டும் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும்.
துணிச்சலான தலைவர்
அத்துடன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஊழலையும் அதன் உண்மையான தீமைகளையும் இல்லாதொழிக்க தேசத்திற்கு புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான தலைவர் தேவை என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோ மற்றும் செயலாளர் பிசப் ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கையில் இந்த கோரிக்கையும் வலியுறுத்தலும் அடங்கியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri