முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா(Mervyn Silva) மற்றும்குறித்த வழக்கு தொடர்பான மூன்று பிரதிவாதிகளை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மஹர நீதவான் நீதிமன்றம் இன்றையதினம்(8) பிறப்பித்துள்ளது.
பிடியாணை பிறப்பிப்பு
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
