இலங்கை வரலாற்றில் பதிந்த அழியாத தடம் - அலி சப்ரி ஆதங்கம்
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டுக்கொல்லப்பட்டு நேற்றுடன் 18 வருடங்களாகியுள்ளன. இந்தநிலையில் அன்னாரை நினைவுகூர்ந்து அமைச்சர் அலிசப்ரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த புனிதமான நாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரக்கமற்ற வன்முறையால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த ஒரு சிறந்த இராஜதந்திரி லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவை போற்றுகின்றோம்.
அனைத்து இலங்கையரினதும் பொதுவான நோக்கத்துக்கான லக்ஷ்மன் கதிர்காமரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் எமது தேசத்தின் வரலாற்றில் ஒரு அழியாத தடத்தை பதித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 15 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri