நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் காரியாலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டுவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி
அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள்
உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எனக் கலந்து கொண்டுள்ளனர்.