யாழ்.பல்கலையில் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ம் திகதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான கடும் எதிர்ப்பு அழுத்தங்களுக்குப் பின் மீண்டும் அதனை அதே இடத்தில் கட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்வந்தனர்.
இவ்வாறாக கடந்த ஜனவரி 11 ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
