யாழ்.பல்கலையில் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ம் திகதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பல்கலைக்கழக மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான கடும் எதிர்ப்பு அழுத்தங்களுக்குப் பின் மீண்டும் அதனை அதே இடத்தில் கட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்வந்தனர்.
இவ்வாறாக கடந்த ஜனவரி 11 ம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri