தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பட்டை கடுமையாக சாடும் திலீபன் எம்.பி
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குத் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில்லை என வன்னி
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானகு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் (19.05.2023) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்த கொண்டபின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வருவதில்லை. ஆனால், தனிநபர்களின் பிரச்சனைக்கு உடனடியாக வருகிறார்கள்.
மக்களுக்கான தீர்வு
மன்னாரில் இடம்பெற்ற மண் அள்ளும் பிரச்சனையில் சில மதகுருமாருடன் இணைந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மண் அள்ளுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
இதைவிட, மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. இதேபோல் அந்த பிரச்சனைகளையும் பேசி மக்களுக்கான தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த எந்த கருத்துக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை. மாறாகத் தொல்பொருள் சம்மந்தப்பட்ட பிரச்சினை தான் பேசப்பட்டது.
ஆவணங்கள் வழங்குதல்
மக்களின் வாழ்வாதாரம், வயற்காணிகளை விடுவித்தல், தொழில் துறைகளை ஏற்படுத்துதல் தொடர்பில் அங்குப் பேசவில்லை. எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் காணி விடுவிப்பு, காணி ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்தல், நில அளவை பிரச்சினைக்குத் தீர்வு காணல் தொடர்பில் பேசி முன்னேற்றம் கண்டுள்ளோம்.
அதன் ஒரு கட்டமாக வட இலாகாவுடன் பேசி காணிகள் விடுவிக்கப்படுகிறது. மத்திய தர வர்க்கத்தின் காணிகள் விடுவிக்கப்படுகிறது. ஆவணங்கள் வழங்கப்படுகிறது. எனவே நாங்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
