காணி விடுவிப்பு தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் (photos)
காணிகள் விடுவிக்கப்படும் போது கிராம மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்குவதுடன், ஏனையவற்றை மாவட்டத்திற்குள் காணியற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இன்று (20.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மஸ்தான் பங்குபற்றுதலுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
வனவள பிரச்சனை
இந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் வனவள பிரச்சினைகள் தொடர்பான பட்டியலை தயார் செய்து முடிக்க அமைச்சு முடிவு எடுத்துள்ளது.
இதனால் கிராம சேவையாளருடன் இணைந்து வனவள பிரச்சினைகளை, கிராம அமைப்புகளுக்கு தெரிவித்து வனவள அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு அறிக்கை தயாரிக்க விரைவாக செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணிகள் விடுவிக்கப்படும் போது, அதே கிராம மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்கி மிகுதியை ஏனையவர்களுக்கு குறிப்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் எனவும், மெனிக்பாமில் உளுந்து செய்கை செய்யும் காணியை ஒருவருக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்கி, பலர் பயன்பெற செய்ய வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கப்படும் வயல் காணிகளை ஒரு ஏக்கர் வீதம் காணி அற்றவர்களுக்கு வழங்கவேண்டும்.
முன்னுரிமை பட்டியல் மீளாய்வு
இது தொடர்பில் கமநல சேவை நிலையங்களில் உள்ள முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்து அதனை வழங்க வேண்டும்.
இதுவரை 10 வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத குளங்களின் பட்டியலை தயாரித்தல், வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களின் பட்டியலை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், பெயர் அளவில் இருக்கின்ற இயங்காத சனசமூக நிலையங்களின் பதிவுகளை இரத்து செய்து ஏனைய சனசமூக நிலையங்களை மீள் நிர்வாகத் தெரிவுகளை செய்தல், உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிய பொழுது விளையாட்டு மைதானங்கள் தொடர்பாக அக்கறை செலுத்தவில்லை.
ஆகவே, பிரதேச சபைக்குட்பட்ட மைதானங்களை புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் மெனிக்பாம், வீரபுரம் மற்றும் ஏனைய இடங்களில் பல காலமாக பூட்டப்பட்ட வீடுகளை, வீடற்றவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உரிய நடவடிக்கை
இதனையடுத்து சமூக நீர் வழங்கல் திணைக்களம், நிதி இன்மை இருந்தாலும் தங்களின் கீழ் எத்தனை குடிநீர் திட்டங்கள் இயங்காமல் இருக்கின்றன.
அரைகுறையாக இருக்கும் திட்டங்கள், கப்பாச்சி போன்ற இடங்களின் திட்டங்கள் தொடர்பான முழு அறிக்கையினை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர் பாபஜோன், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், செட்டிகுளம் பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
