ஐ.மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்து உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளித்து வந்த உள்ளுராட்சி சபைகளை சேர்ந்த 16 உறுப்பினர்கள் மீண்டும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொண்டதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கம்பளை, கண்டி, உடபலாத்த ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே இவ்வாறு மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்.
கம்பளை நகர சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு கட்சியில் மீண்டும் இணைந்துக்கொண்ட உறுப்பினர்கள் பகிரங்கமான செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தமது தீர்மானம் குறித்து தெளிவுப்படுத்த உள்ளனர் எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த பலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விண்ணப்பித்துள்ளனர் எனவும் இவர்களில் கோரிக்கை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.