எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்க்கும் சம்பந்தன்: ஆனந்தசங்கரி தெரிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசப் போகின்றேன் எனக்
கூறிக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை
எதிர்பார்ப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரண கர்த்தாவாகும்.
மகிந்தவுடன் கலந்துரையாடல்
ஏனெனில், இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தப் பிரதேசத்தில்
இருந்த தமிழ் மக்களை அப்போதைய
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி
காப்பாற்ற வருமாறு அழைப்பு விடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் வரவில்லை என கூறினார்.
மேலும், தற்போது கனடா நாடாளுமன்றத்தில் இலங்கையில் இடம்பெற்றது இனப் படுகொலைதான் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கிறேன்.
ஏனெனில் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் மக்களை காப்பாற்றாமல் விட்டது தமிழ் தலைவர்களுடைய பிழையாகும் எனவும் அவர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆறு தடவைகள் பிரதமராக இருந்து அவரிடம் சாதிக்க முடியாதவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது தமிழர் பிரச்சினை தொடர்பில் பேசப்போகிறேன் என கூறுகிறார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் மக்களுக்காக பயன்படுத்தாது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அரச சுகபோகங்களையும் அனுபவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றப் போகிறார்கள்.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் அல்லது ஏனைய பொறுப்பான பதவிகளை வகிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விருப்பம் இருக்கிறது.
ஆனால் யாருக்கு வழங்குவது என அவர்களுக்குள்ளே முரண்பாடு இருப்பதால் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் ஏதோ ஒரு வகையில் சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.
இந்தியாவின் உதவி
மேலும், இந்தியத் தமிழ்நாடு மட்டும் போதும் இலங்கை மக்களை பட்டினியில் இருந்து மீட்பதற்கு.
இந்தியா தற்போது இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அனுப்பி வைத்துள்ளது. சிலர் அதனை தாம் கேட்டு பெற்றுக் கொண்டதாக அரசியல் செய்து வருகின்றனர்.
இருப்பினும் இந்தியா தமிழ் மக்களின் நிலையை அறிந்து அவர்களாகவே உதவி செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video