ஐக்கிய மக்கள் சக்தி கிராம தலைவர்களுடான சந்திப்பு (photos)
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மருதமடு வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கிராம தலைவர்களுடான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (12.02.2023) ஐக்கிய மக்கள் சக்தியின் பரசன்குளம் ஓமந்தையில் வட்டார வேட்பாளர் அஞ்சலா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வேட்பாளரின் தலைமை உரையுடன் தொடர்ந்து துணை வேடப்பாளர்களான குமார், மற்றும் அலுவலக பொறுப்பாளர் சாந்தன் ஆகியோர் கட்சியின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், இதன்போது கிராம தலைவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டிருந்தது.

கிராம தலைவர்களுடான சந்திப்பு
இதில் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், கோவில் அமைப்பு தலைவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், சமுர்த்தி தலைவர்கள், விளையாட்டு கழக தலைவர்கள், மாதர் சங்க தலைவிகள், முதியோர் சங்க தலைவர்கள் மற்றும் கமக்கார அமைப்பு தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.