மன்னாரில் அரசியல் நிலவரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டம் (photo)
ஐக்கிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட தொகுதியில் அரசியல் நிலவரம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (07.01.2023) இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
விசேட கூட்டம்
'மாற்றத்திற்கான புதிய ஆரம்பம்' எனும் தொனிப் பொருளில் வளமான அபிவிருத்தி வளமான எதிர்காலத்திற்கு எங்களின் ஒன்றிணைந்த தெரிவு என்பதன் அடிப்படையில் நமக்காக நாம் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை வலுப்படுத்த வெற்றி பெற செய்வதன் நோக்கமாகக் கொண்டு குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, உமா சந்திர பிரகாஷ் மற்றும் வவுனியா மன்னார் மாவட்ட கட்சியின் இணைப்பாளர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri

மளிகைப் பொருட்கள் முதல் விலையுயர்ந்த கார்கள் வரை.., ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறையும் பொருட்கள் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
