கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜிக்குமிடையில் சந்திப்பு
இந்தியாவின் சிறந்த ஆன்மீகத் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் ஆசீர்வாதம் பெற்றதோடு, அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை மக்களுக்கான உதவி
இதன் போது அவரது ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் மூலம் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக உதவி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி வாழ்க்கையின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைப் போதிக்கும் புத்தகங்களைப் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு பரிசாக வழங்கியதோடு தற்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள பணிகளுக்கு பாராட்டுக்களையும் கூறியுள்ளார்.
ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு என்பது ஒரு உலகளாவிய அமைப்பாகும், இது உலகளாவிய மக்கள் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குதல் போன்ற சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
