முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கும் உலக உணவுத்திட்ட இணைப்பாளருக்கும் இடையில் சந்திப்பு (Photos)
உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான அரச இணைப்பாளர் முஸ்தப்பா நியமத்கும், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
உலக உணவுத்திட்டம்
இந்த கலந்துரையாடல் நேற்று (07.10.2022) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடலில் முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகமொன்றை நிறுவுதல் தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் உலக உணவுத்திட்டத்தின் நிவாரண செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான களஞ்சிய நிர்வாக அதிகாரி தம்மிக்க மற்றும் ஆலோசகர் முகாஸ் முதலியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



