மொட்டுக் கட்சியின் எம்.பிக்கள் மஹிந்த தலைமையில் முக்கிய சந்திப்பு! தேர்தல் தொடர்பிலும் ஆராய்வு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (07.03.2023) முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற விடயங்களுக்குப் பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்
அமைச்சருமான பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளார்.




